நுகர்வோர் நீதிமன்றங்களுக்கு தலைவர், உறுப்பினர்களை நியமிக்கக்கோரி வழக்கு :

By செய்திப்பிரிவு

மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகம் முழுவதும் 32 நுகர்வோர் நீதிமன்றங்கள் உள்ளன. மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களில் ஒரு தலைவர், 2 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். மதுரை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்துக்கு தலைவர், உறுப்பினர்கள் இல்லை. இதனால் வேறு மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி மற்றும் உறுப்பினர்கள் வாரத்தில் ஒரு நாள் மதுரை வந்து பணிபுரிகின்றனர். பெரும்பாலான நாட்கள் மதுரை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் செயல்படுவதில்லை.இதனால் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் விசாரிக்கப்படாமல் கிடப்பில் உள்ளன. எனவே காலியாக உள்ள நுகர்வோர் நீதிமன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் துரைசாமி, ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர், இதேபோன்ற கோரிக்கையுடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று கூறி விசாரணையை செப்.15-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 mins ago

இந்தியா

16 mins ago

சுற்றுச்சூழல்

26 mins ago

இந்தியா

29 mins ago

இந்தியா

36 mins ago

இந்தியா

21 mins ago

விளையாட்டு

42 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

10 hours ago

மேலும்