ஆந்திராவில் இருந்து காட்பாடி வந்த ரயிலில் சேலம் வெள்ளி வியாபாரி எடுத்துவந்த சுமார் 17 கிலோ வெள்ளி கட்டிகள், ரூ.4.25 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேற்குவங்க மாநிலம் புரூலியாவில் இருந்து விழுப்புரம் நோக்கிச் சென்ற விரைவு ரயில் நேற்று பிற்பகல் 3.15 மணியளவில் வாலாஜா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது, சென்னை கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படையின் குற்றப்புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளர் செல்வகுமார் தலைமையிலான காவலர்கள் எஸ்-5 பெட்டியில் பயணித்த சேலம் பயணி ரவி (40) என்பவர் வைத்திருந்த பையை சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டனர்.
அதில், வெள்ளி வியாபாரியான அவர் உரிய பில்கள் இல்லாமல் 16 கிலோ 950 கிராம் எடையுள்ள வெள்ளி கட்டிகள் மற்றும் ரூ.4.25 லட்சம் ரொக்கப் பணம் இருந்தது. ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் இருந்து புரூலியா ரயிலில் அவர் வந்ததும், காட்பாடியில் இறங்கி மாற்று ரயிலில் சேலம் செல்ல முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து, காட்பாடி ரயில்வே பாதுகாப்புப் படை வசம் ரவி ஒப்படைக்கப்பட்டார். அவரிடம், தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
3 mins ago
சினிமா
6 mins ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
தமிழகம்
4 mins ago
சினிமா
22 mins ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
தமிழகம்
16 mins ago
சினிமா
27 mins ago
சினிமா
30 mins ago
வலைஞர் பக்கம்
34 mins ago
சினிமா
39 mins ago
சினிமா
44 mins ago