பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு :

By செய்திப்பிரிவு

இந்திய அரசு வழங்கும் பத்ம விருதுகளுக்கு தகுதியானவர்கள் விண்ணபிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இந்திய அரசு ஆண்டுதோறும் பத்மவிபூஷன், பத்மபூஷன், பத்ம விருதுகளை வழங்கி வருகிறது. மேன்மை பொருந்திய பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.

கலை, அறிவியல், இலக்கியம், மருத்துவம், கல்வி, விளையாட்டு, தொழில்நுட்பம், சமூக நலன், பொதுப்பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் மிக குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரண மான பணி ஆற்றியோருக்கு 2022-ம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2022-ம் ஆண்டின் குடியரசு தின விழாவில் இவ்விருதுகள் வழங்கப்படும். தொழில், இனம், வேலை, பாலினம் ஆகிய வேறுபாடுகள் இன்றி இவ்விருதுகள் வழங்கப்படுகிறது.

விருது தொடர்பான விவரங்கள் www.padmaawards.gov.in என்ற இணைய முகவரியில் உள்ளது. இந்த இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

44 mins ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

3 hours ago

உலகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

வேலை வாய்ப்பு

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

கல்வி

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்