சின்னசேலம் அருகே அரசு பேருந்து மோதி - இசைக் கல்லூரி மாணவர் உட்பட இருவர் உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

சின்னசேலம் அருகே அரசு பேருந்தும் காரும் மோதி விபத்துக்குள்ளானதில் இசைக் கல்லூரி மாணவர் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்தனர்.

சென்னையில் இருந்து சேலம் நோக்கி வாடகை காரில் தனியார் இசை கல்லூரியில் படித்து வரும் மாணவர் சேலத்தைச் சேர்ந்த ஆஷிக் (28) என்பவர் நேற்று மதியம் சென்று கொண்டிருந்தார். கள்ளக்குறிச்சி அருகே உள்ள சின்னசேலம் புறவழிச்சாலையில் வந்த போது, சேலத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இதில், சென்னை காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த வாடகை கார் ஓட்டுநர் முருகன் (36) மற்றும் காரில் பயணம் செய்த இசைக் கல்லூரி மாணவர் ஆஷிக் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் கட்டுப்பாட்டை இழந்த பேருந்துஅருகே இருந்த ஏரியில் புகுந்ததால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு பேருந்தை விட்டுஇறங்கி ஓடினர். அவர்கள் பெரிய அள வில் காயங்கள் ஏதுமின்றி தப்பினர்.

உயிரிழந்த இருவரின் உடலை மீட்டசின்னசேலம் போலீஸார், கள்ளக்குறிச்சிமாவட்ட அரசு தலைமை மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

வணிகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

5 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

க்ரைம்

6 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்