மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் மருதம்பள்ளம் கீழவெளியைச் சேர்ந்தவர் ஐயப்பன்(22). கட்டிடத் தொழிலாளி. இவர், 10-ம் வகுப்பு படித்து வரும் சிறுமியை திருமணம் செய்வதாகக் கூறி, கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில், மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் ஐயப்பனை நேற்று கைது செய்தனர்.
திருச்சி ரங்கத்தைச் சேர்ந்தவர் வாவாசி மகன் பிரதீப்(19). பெரம்பலூர் மாவட்டத்தில் தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்த இவர், சில தினங்களுக்கு முன்பு 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெரம்பலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் நேற்று பிரதீப் கைது செய்யப்பட்டார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
2 hours ago
உலகம்
6 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
8 hours ago
சினிமா
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago