கலை இலக்கிய பெருமன்ற வைர விழா போட்டிகள் :

By செய்திப்பிரிவு

கலை இலக்கிய பெருமன்றத்தின் வைர விழாவை முன்னிட்டு பல்வேறு கலை, இலக்கியப் போட்டிகள் ஆக்ஸ்ட் மாதம் தொடங்கி, அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரைஓராண்டு காலத்துக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 15-ம் தேதி போட்டிகள் தொடங்குகின்றன. அன்று, ‘மாநில சுயாட்சி- இந்திய ஒற்றுமையின் புதிய குரல்’ என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடைபெறுகிறது. ஆகஸ்ட்15-ம் தேதி காலை 10 மணிக்கு ஜூம் செயலி வழியே போட்டி நடைபெறும்.

இப்பெருமன்ற நிறுவனர் ப.ஜீவானந்தம் பிறந்தநாளான ஆகஸ்ட் 20-ம் தேதி கவிதை மற்றும்ஆய்வுக் கட்டுரை போட்டிகள் நடைபெற உள்ளன. ‘செந்தமிழ் நாடிது-எங்கள் செந்தமிழ் நாடிது’ என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி நடைபெறும் .

‘தமிழ் எங்கள் உரிமை’என்ற தலைப்பில் நடைபெறும் கவிதைப் போட்டிக்கு 2 பக்கங்களுக்கு மிகாமல் கவிதைகளை ஆகஸ்ட் 19-ம் தேதிக்குள் வந்து சேரும் வகையில் அனுப்ப வேண்டும். மேலும விவரங்களுக்கு 97151 85309 என்ற கைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

11 mins ago

சினிமா

29 mins ago

வாழ்வியல்

11 mins ago

தமிழகம்

47 mins ago

க்ரைம்

54 mins ago

வணிகம்

58 mins ago

சினிமா

55 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

உலகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்