ராசிபுரம் நகராட்சி அலுவலகம் எதிரில் தூய்மைப் பணியாளர்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராசிபுரம் நகராட்சியில் 80-க்கும் மேற்பட்ட ஒப்பந்த அடிப்படையிலான தூய்மைப் பணியாளர்கள் உள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக இவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை என்றும், இதுகுறித்து நகராட்சி அலுவலகத்தில் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை, என்றும் தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்று தூய்மைப் பணியாளர்கள் பணிக்கு செல்லாமல் நகராட்சி அலுவலகம் எதிரில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 3 மாதமாக ஊதியம் வழங்கப்படாததால் குடும்பம் நடத்த முடியாமல் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருவதாக தெரிவித்தனர்.
அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய நகராட்சி அதிகாரிகள் ஊதியம் வழங்குவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையேற்று அனைவரும் கலைந்து சென்றனர்.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
51 mins ago
விளையாட்டு
1 hour ago
சினிமா
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
5 hours ago
இந்தியா
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
சினிமா
7 hours ago
இந்தியா
8 hours ago