திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட் டையைச் சேர்ந்த நித்யா, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
நான் 40 சதவீத மாற்றுத் திறனாளி. சட்டப்படிப்பு முடித்துள்ளேன். உரிமையி யல் நீதிபதி பணிக்கான எழுத்துத் தேர்வில் பங்கேற்க அதிகபட்ச வயது வரம்பு 40 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு மற்றும் அனுபவ தளர்வு வழங்கப்படவில்லை. நான் முறையான அனுபவங்களைப் பெற்று உரிமையியல் நீதிபதி பணிக்கான எழுத்துத் தேர்வில் பங்கேற்கும்போது நான் வயது வரம்பைக் கடந்திருப்பேன். இதனால் தேர்வெழுதும் வாய்ப்பு கிடைக்காது. எனவே, வரும் காலங்களில் உரிமையியல் நீதிபதி பணியிடங் களுக்கான எழுத்துத்தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு வயது மற்றும் அனுபவ தளர்வு சலுகை வழங்க உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த மனுவை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்து, பாக்கியராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் மனுதாரர் கோரிக்கை தொடர்பாக தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள்கொண்ட குழு ஆலோசித்து வருகிறது. எனவே, உரிமையியல் நீதிபதி தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கான தளர்வுகள் வழங்குவது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று கூறி மனுவை முடித்து உத்தரவிட்டது.
முக்கிய செய்திகள்
இந்தியா
29 mins ago
சினிமா
36 mins ago
இந்தியா
1 hour ago
வர்த்தக உலகம்
1 hour ago
ஆன்மிகம்
42 mins ago
இந்தியா
52 mins ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
2 hours ago
சினிமா
2 hours ago
தமிழகம்
2 hours ago
கருத்துப் பேழை
2 hours ago