செங்கத்தில் தர்ணா போராட்டம் எதிரொலி - 14 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகை வழங்க ஆணை :

By செய்திப்பிரிவு

செங்கம் வட்டாட்சியர் அலுவல கத்தில் மாற்றுத்திறனாளிகள் நடத்திய தர்ணா போராட்டத்தின் பலனாக 14 பேருக்கு உதவித் தொகை பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், தி.மலை மாவட்டம் செங்கம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று உதவித் தொகைமற்றும் நலத் திட்ட உதவிகளை வழங்காமல் அலைக்கழிக்கப்படு வதை கண்டித்து தர்ணா போராட்டம் நடைபெற்றது.

அப்போது அவர்கள் கூறும் போது, “மாதாந்திர உதவித்தொகை கேட்டு மாற்றுத்திறனாளி கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு உதவித் தொகை வழங் காமல் வருவாய்த் துறையினர் அலைக்கழிக்க செய்கின்றனர். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவில்லை. இது தொடர்பாக மனு கொடுத்தும் அதிகாரிகள் அலட்சியம் செய்கின்றனர். விண்ணப்பித்துள்ள தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகை மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும்” என்றனர்.

இதைத்தொடர்ந்து சமூக பாதுகாப்புத் திட்டம் மூலம் 14 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை பெறுவதற்கான ஆணையை வட்டாட்சியர் மனோ கரன் வழங்கினார். மேலும் அவர், தகுதி உள்ள அனைவருக்கும் உதவித் தொகை பெறுவதற்கான ஆணை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்க விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து மாற்றுத்திறனாளிகள் தர்ணா போராட் டத்தை கைவிட்டு புறப்பட்டு சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

விளையாட்டு

26 mins ago

இந்தியா

44 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

52 mins ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஆன்மிகம்

50 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

உலகம்

2 hours ago

மேலும்