வாடகைக்கு இயக்கப்படும் சொந்த வாகனம்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் :

By செய்திப்பிரிவு

செங்கல்பட்டு பகுதியில் வாடகை வாகனத்துக்கான உரிமம் பெறாமல், சொந்த வாகனங்களை வாடகைக்கு இயக்குவோர் மீது போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து வாடகை வாகன ஓட்டுநர்கள் கூறியதாவது: சுற்றுலா, தொழிற்சாலைகள், பயணிகள் வாகனங்களில் வாகன பதிவு எண் பலகை மஞ்சள் நிறத்தில் இருக்கும். அதே நேரத்தில், சொந்த பயன்பாட்டுக்கு வைத்துள்ள வாகனங்களின் வாகன பதிவு எண் பலகை வெள்ளை நிறத்தில் இருக்கும். இந்நிலையில் சொந்த வாகனங்களை வைத்திருப்போர், வாடகை வாகனத்துக்கான உரிமம் பெறாமல், தங்களது வாகனத்தை குறைந்த கட்டணத்தில் வாடகைக்கு ஓட்டி வருகின்றனர். இதனால், உரிமம் பெற்று வாடகை வாகனம் இயக்குவோருக்கு குறைந்த சவாரியே கிடைக்கிறது. இதனால் ஃபைனான்ஸ் மூலம் கார் வாங்கியவர்கள், மாத தவணைகூட செலுத்த முடியாமல் திண்டாடி வருகின்றனர்.

மேலும், அரசுக்கு வரி வருவாய் இழப்பு ஏற்படுவதுடன், பல்வேறு வரிகளை செலுத்தி, வாகனங்களை இயக்கி வரும் வாடகை வாகன உரிமையாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே, இந்தப் பிரச்சினையில் அரசு தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

19 mins ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

7 hours ago

இந்தியா

7 hours ago

மேலும்