திருப்போரூரில் இளைஞர் கொலை : மானாம்பதி போலீஸார் விசாரணை

By செய்திப்பிரிவு

திருப்போரூர் அருகே மர்ம நபர்களால் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

திருப்போரூர் அருகே உள்ள அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் ரவி. விவசாய கூலித் தொழிலாளி. இவரது மகன் அஜீத்(23). இவர் நேற்று முன்தினம் வீட்டை வீட்டு வெளியில் சென்றார். ஆனால் திரும்பி வரவில்லை. எனவே அஜீத்தை பல்வேறு இடங்களில் தேடிவந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை ஆமூர் பெரிய ஏரிக்கரை வழியாகச் சென்றவர்கள் காயங்களுடன் இளைஞர் ஒருவர் இறந்து கிடப்பதுகுறித்து மானாமதி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீஸார் இளைஞரின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். அவர் அஜீத் என்பது தெரியவந்தது.

ஆமூர் ஏரிக்கரையில்...

ஆமூர் ஏரிக்கரையில் உள்ள முள்புதரில் மர்ம நபர்கள் அஜீத்தை கல்லால் அடித்து கொலை செய்துவிட்டு சடலத்தை வீசிச் சென்றுள்ளனர். கொலைக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. இது தொடர்பாக மானாம்பதி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

3 hours ago

வலைஞர் பக்கம்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

இந்தியா

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்