110 கிலோ கஞ்சா பறிமுதல் : கேரளா, ஆந்திராவை சேர்ந்த 4 பேர் கைது :

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி: திருச்செந்தூர் பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. டிஎஸ்பி (பொ) பாலாஜி, ஆய்வாளர் ஞானசேகரன், உதவி ஆய்வாளர் சுந்தரம் தலைமையிலான போலீஸார் நேற்று காலை அடைக்கலாபுரத்தில் நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அவர்கள் கேரள மாநிலம் கோழிக்கோடு ஜாக்கிஸ்டன் மகன்அஸ்வின் (24), எர்ணாகுளம் முஸ்தபா மகன் அசீர்(22), கண்ணூர் மாவட்டம் தளச்சேரி அப்துல் லத்தீப் மகன் சாம்னாஷ் (22), ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த டத்துபாபு மகன் சாய்கணேஷ் (23) என்பது தெரியவந்தது. இவர்கள் இரு கார்களில் விசாகப்பட்டினத்தில் இருந்து 110 கிலோ கஞ்சாவை கடத்தி வந்து, திருச்செந்தூரில் உள்ள ஏஜென்ட் மூலம் விற்பனை செய்வது தெரியவந்தது. இவர்களின் இரு கார்களையும், அதிலிருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள 110 கிலோ கஞ்சாவையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

இந்தியா

38 mins ago

தமிழகம்

51 mins ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

2 mins ago

ஜோதிடம்

44 mins ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்