பழங்குடியினர் பல்கலை. கோரி வழக்கு : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

By செய்திப்பிரிவு

பழங்குடியினர் பல்கலை. அமைக்க கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

திண்டுக்கல் அல்லது நீலகிரியில் பழங்குடியினர் பல்கலைக்கழகம் அமைக்கக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகோமதி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழ்நாட்டில் 36 விதமான பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர். பல பழங்குடியின மக்கள் விவசாயம், பாடல், ஆடல், பாம்பு கடிகளுக்கு மருந்து கண்டுபிடித்தல் வைத்தியத் தொழில் செய்து வருகின்றனர்.

பழங்குடியின மக்களின் கல்வி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கத்தில் மத்தியப் பிரதேசத்தில் இந்திராகாந்தி பழங்குடியினர் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. ஆந்திராவில் பழங்குடியினர் பல்கலைக்கழகம் ரூ.834 கோடி செலவில் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களில் இருக்கும் பழங்குடியின மக்கள் ஒரே பிரிவைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இதனால் திண்டுக்கல் அல்லது நீலகிரி மாவட்டங்களில் பழங்குடியினர்பல்கலைக்கழகம் தொடங்கினால் இம்மூன்று மாநிலங்களில் வாழும் பழங்குடியின மக்கள் கல்வித்தகுதி பெறுவர்.

எனவே, திண்டுக்கல் அல்லது நீலகிரியில் பழங்குடியினர் பல்கலைக்கழகம் தொடங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக மத்திய கலாச்சாரத்துறை செயலர், தமிழ்நாடு உயர் கல்வித் துறைச் செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 mins ago

சுற்றுச்சூழல்

31 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

4 hours ago

வலைஞர் பக்கம்

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்