திருச்சி: திருச்சியில் 108 பேர், தஞ்சாவூரில் 210 பேர், திருவாரூரில் 40 பேர், நாகையில் 47 பேர், கரூரில் 24 பேர், புதுக்கோட்டையில் 39 பேர், பெரம்பலூரில் 15 பேர், அரியலூரில் 29 பேர், மயிலாடுதுறையில் 22 பேர் என மத்திய மண்டலத்தில் மொத்தம் 534 பேருக்கு புதிதாக கரோனா தொற்று நேற்று கண்டறியப்பட்டுள்ளது.
தஞ்சாவூரில் கடந்த 6-ம் தேதி 206, 7-ம் தேதி 198, 8-ம் தேதி 190, 9-ம் தேதி 179, 10-ம் தேதி 174 என கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், நேற்று மீண்டும் 210 ஆக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் திருச்சியில் 144, கரூரில் 11, திருவாரூரில் 32, தஞ்சாவூரில் 116, நாகையில் 24, புதுக்கோட்டையில் 33, பெரம்பலூரில் 10, அரியலூரில் 37, மயிலாடுதுறையில் 15 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர்.
மயிலாடுதுறை, நாகப்பட்டினத்தில் தலா ஒருவர், திருவாரூர், தஞ்சாவூரில் தலா 2 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர், திருச்சியில் உயிரிழப்பு இல்லை.
காரைக்கால் மாவட்டத்தில் நேற்று பெறப்பட்ட 404 பரிசோதனை முடிவுகளில் 16 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று உயிரிழப்பு இல்லை.
முக்கிய செய்திகள்
இந்தியா
45 mins ago
இந்தியா
56 mins ago
சினிமா
57 mins ago
இந்தியா
1 hour ago
வணிகம்
9 hours ago
சுற்றுச்சூழல்
2 hours ago
சுற்றுலா
2 hours ago
கல்வி
1 hour ago
தமிழகம்
3 hours ago
சுற்றுலா
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago