பிரான்ஸில் வேலை வாங்கித் தருவதாக மோசடி: நைஜீரிய இளைஞர் கைது :

By செய்திப்பிரிவு

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜாஸ்லின் மேரி. இவர் சென்னை விமான நிலையத்தில் தனியார் விமான சேவையில் பணியாற்றி வரு கிறார். இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவரது தொலைபேசிக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் தன்னை பிரெஞ்சு நாட்டு தூதரக அதிகாரி என்று அறிமுகபடுத்தி கொண்டு , தாங்கள் புதுச்சேரியை சார்ந்தவர் என்பதால் பிரான்ஸ் விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்தார். அதற்கு அந்த நபரின் வங்கிக் கணக்கில் ரூ. 5 லட்சத்து 25 ஆயிரம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

இதனை நம்பிய ஜாஸ்லின் மேரி அந்த வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தி உள்ளார். பணத்தை பெற்று கொண்ட அந்த நபர் வேலை வாங்கி தராமல் தனது செல்போனை அனைத்து வைத்துவிட்டு மாயமாகியுள்ளார். நடந்தவை குறித்து ஜாஸ்லின் மேரி புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் தொலைபேசி எண் மற்றும் வங்கி கணக்கை வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

அதில் ஜாஸ்லின் மேரியை ஏமாற்றியது நைஜீரியா நாட்டை சேர்ந்தவர் என்று தெரிந்தது. பெங்களுருவில் பதுங்கி இருந்த டைவோ அத்வேலேவை என்ற அந்த நைஜீரிய இளைஞரை கைது செய்து புதுச்சேரி அழைத்து வந்தனர். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி காலாப்பட்டில் உள்ள மத்திய சிறையில் அடைத்தனர்.

வருகிற திங்கட்கிழமை அன்று டைவோ அத்வேலேவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சைபர் க்ரைம் போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

20 mins ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

6 hours ago

க்ரைம்

7 hours ago

உலகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வேலை வாய்ப்பு

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

கல்வி

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்