கஞ்சா கடத்திய இருவர் கைது :

By செய்திப்பிரிவு

திருப்பூர்: பல்லடம் அருகே 48 கிலோ கஞ்சாவை கடத்தியதாக இருவர் கைது செய்யப்பட்டனர். ஒருவர் தலைமறைவானது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

இடுவாய் - மங்கலம் சாலை அண்ணாமலை கார்டனை சேர்ந்த அலெக்ஸ் (33), தேனி மாவட்டம் தேவாரம் முத்தையன் செட்டிபட்டியை சேர்ந்த செல்வம் (41) ஆகிய இருவரும் தேனியில் இருந்து திருப்பூர் அருகே மங்கலம் நோக்கி நேற்று காரில் வந்துகொண்டிருந்தனர். பல்லடம் அருகே சின்னக்கரை பகுதியில், கோவை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 48 கிலோ கஞ்சா இருப்பதை கண்டறிந்தனர்.

இதையடுத்து, 25 கஞ்சா பொட்டலங்களில் இருந்து 48 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். பல்வேறு பிரிவுகளின் கீழ் இருவர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். காரையும் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக புரோட்டா மகேஷ் என்பவரை தேடி வருவதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

க்ரைம்

9 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

மேலும்