எலையமுத்தூர் நியாயவிலைக் கடைகளில் தரமற்ற அரிசி விநியோகிக்கப்படுவதாக புகார் :

By செய்திப்பிரிவு

உடுமலை: உடுமலை தாலுகா எலையமுத்தூர் ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அங்குள்ள நியாயவிலைக் கடைகள் மூலமாக அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன. ஆனால், கடந்த சில மாதங்களாக தரமற்ற அரிசி விநியோகிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு சமத்துவ அம்பேத்கர் மக்கள் கட்சி அமைப்பாளர் தங்கராஜ் அனுப்பியுள்ள புகார் மனுவில், "எலையமுத்தூர் ஊராட்சி விவசாய கூலி தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக உள்ளது. நியாயவிலைக் கடை மூலமாக வழங்கப்படும் அரிசியை கொண்டுதான் 3 வேளையும் சாப்பிடும் நிலையில் உள்ளனர். கடந்த சில மாதங்களாகவே தரமில்லாத அரிசியை விநியோகித்து வருகின்றனர். இதுதொடர்பாக கடை ஊழியர்களிடமும், அதிகாரிகளிடமும் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுகுறித்து ஆட்சியர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

35 mins ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

3 hours ago

உலகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

வேலை வாய்ப்பு

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

கல்வி

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்