ஆன்லைன் ஒலிம்பிக் விநாடி வினா போட்டி :

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஜப்பான் நாட்டின் டோக்கியா நகரில் ஒலிம்பிக் போட்டிகள் 23.7.2021 முதல் 8.8.2021 வரை நடைபெற உள்ளன. ஒலிம்பிக் போட்டிகளில் தமிழகத்தில் இருந்து மேஜைப்பந்து போட்டியில் ஜி.சத்தியன், ஏ.சரத்கமல், வாள் சண்டையில் சி.ஏ.பவானிதேவி, பாய்மரப்படகு ஓட்டுதல் போட்டியில் கே.சி.கணபதி, வருண் தக்கர், நேத்ரா குமணன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

ஒலிம்பிக் போட்டி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், `டோக்கியோவை நோக்கிச் சாலை' என்ற தலைப்பில் ஒலிம்பிக் விநாடி வினா போட்டி இணையதளம் மூலம் வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது. இப்போட்டியில், அனைத்து வயதினரும் https:fitindia.gov.in என்ற இணையதளம் மூலம் தனித்தனியாக 22-ம் தேதி காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை பங்கேற்கலாம். வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

30 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்