தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஜப்பான் நாட்டின் டோக்கியா நகரில் ஒலிம்பிக் போட்டிகள் 23.7.2021 முதல் 8.8.2021 வரை நடைபெற உள்ளன. ஒலிம்பிக் போட்டிகளில் தமிழகத்தில் இருந்து மேஜைப்பந்து போட்டியில் ஜி.சத்தியன், ஏ.சரத்கமல், வாள் சண்டையில் சி.ஏ.பவானிதேவி, பாய்மரப்படகு ஓட்டுதல் போட்டியில் கே.சி.கணபதி, வருண் தக்கர், நேத்ரா குமணன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
ஒலிம்பிக் போட்டி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், `டோக்கியோவை நோக்கிச் சாலை' என்ற தலைப்பில் ஒலிம்பிக் விநாடி வினா போட்டி இணையதளம் மூலம் வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது. இப்போட்டியில், அனைத்து வயதினரும் https:fitindia.gov.in என்ற இணையதளம் மூலம் தனித்தனியாக 22-ம் தேதி காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை பங்கேற்கலாம். வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
முக்கிய செய்திகள்
வணிகம்
30 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
7 hours ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
க்ரைம்
2 hours ago
இந்தியா
2 hours ago
வாழ்வியல்
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
2 hours ago