திருவண்ணாமலை: டெல்லி இந்திராகாந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக் கழகம் சார்பில் 6 சான்றிதழ் படிப்புகளுக்கும், 2 பட்டப் படிப்புகளுக்கான வகுப்புகளை தி.மலை மாவட்டம் வந்தவாசியில் உள்ள அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “18 வயது முதல் அனைத்து வயதினரும் கல்வி பயிலும் வகையில் இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகம் அனுமதித்துள்ளது. 6 சான்றிதழ் படிப்புகள் மற்றும் 2 பட்டப்படிப்புகள் தொடங்கப்படவுள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் முதன் முறையாக கற்போர் உதவி மையமாக தேர்ந்தெடுத்து அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த படிப்புகளுக்கான சேர்க்கை ஜுலை 15-ம் தேதி வரை இணையதளம் வழியாக நடைபெறுகிறது. படிப்பை இடையில் நிறுத்தியவர்களும், முப்பது வயதுக்கு மேற்பட்டவர்களும் ஏதேனும் ஒரு தொழில் செய்து வருபவராக இருந்தாலும், இந்த மையத்தின் மூலம் கல்வி கற்று பயனடையலாம். https://ignouadimission.samarth.edu.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பக்கலாம்.
மேலும், விவரங்களுக்கு 88254-67239, 70994-97164 என்ற செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
இந்தியா
38 mins ago
கருத்துப் பேழை
22 mins ago
தமிழகம்
58 mins ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
வாழ்வியல்
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
6 hours ago
தமிழகம்
6 hours ago
சினிமா
3 hours ago
இந்தியா
3 hours ago