சசிகலாவுடன் தொலைபேசியில் பேசுவோரை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுகவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் திருப்பரங்குன்றத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் எஸ்.என்.ராஜேந்திரன் தலைமை வகித்தார். மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா பேசினார். மேலூர் எம்எல்ஏ பெரியபுள்ளான் என்ற செல்வம், மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய கழகச் செயலாளர் நிலையூர் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக கே.பழனிசாமி, எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டதை வரவேற்றும், சசிகலாவோடு பேசுவோரை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று கட்சித் தலைமையை வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சிவகங்கை
கூட்டத்தில், அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் சசிகலாவை கட்சிக்குள் அனுமதிக்கக் கூடாது. கட்சிக்கு துரோகம் இழைப்போர் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்படுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
50 mins ago
ஜோதிடம்
1 hour ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
8 hours ago
விளையாட்டு
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
உலகம்
10 hours ago
ஆன்மிகம்
10 hours ago