வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் தீ விபத்து :

By செய்திப்பிரிவு

நாகை வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது.

நாகை வெளிப்பாளையம் காவல் நிலையம் நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வந்தது. நூறு ஆண்டுகள் பழமையான காவல்நிலைய கட்டிடம் பழுதடைந்ததால், வெளிப்பாளையம் காவல் நிலையம், தற்காலிகமாக, நாகை பொது அலுவலக சாலையில் உள்ள காடம்பாடிக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், இங்குள்ள காவல் நிலைய வளாகத்தில் இருந்த, பழுதடைந்த கட்டிடத்தில் இருந்து நேற்று காலை தீப்பற்றி எரிந்தது.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் தியாகராஜன், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அடுத்தடுத்த கட்டிடங்களுக்கு தீ பரவாமல் அணைத்தனர். எனினும் கட்டிடத்தில் இருந்த சில பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

இதுகுறித்து தகவல் அறிந்த டிஎஸ்பி சுப்பிரமணியன், தீவிபத்து ஏற்பட்ட கட்டிடத்தை பார்வையிட்டு விசாரணை செய்தார். மின்கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

தமிழகம்

19 mins ago

இந்தியா

14 mins ago

இந்தியா

27 mins ago

இந்தியா

41 mins ago

தமிழகம்

48 mins ago

இந்தியா

50 mins ago

சினிமா

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

மேலும்