நாகர்கோவில்: பூதப்பாண்டியை அடுத்த கீழஈசாந்திமங்கலத்தைச் சேர்ந்தவர் குமரன்(47). லோடுஆட்டோ வைத்து ஓட்டி வந்தார். இவரது சுமை ஆட்டோவில் புளியங்குளத்தை சேர்ந்த சுபாஷ்(24), வடமாநிலத்தை சேர்ந்த சஞ்சய்(26) ஆகியோர், மார்பிள் கற்கள் பாரம் ஏற்றி ஈசாந்திமங்கலம் சாலையில் வந்துகொண்டிருந்தனர். அப்போது, எதிரே வந்த லாரி ஆட்டோ மீது மோதியது. இதில், ஆட்டோவில் இருந்த 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அப்பகுதியினர் அவர்களை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுபாஷ், குமரன் ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்து போயினர். சஞ்சய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பூதப்பாண்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 mins ago
இந்தியா
16 mins ago
இந்தியா
26 mins ago
இந்தியா
34 mins ago
சுற்றுச்சூழல்
44 mins ago
இந்தியா
47 mins ago
இந்தியா
54 mins ago
இந்தியா
39 mins ago
விளையாட்டு
1 hour ago
கருத்துப் பேழை
4 hours ago
தமிழகம்
2 hours ago
ஜோதிடம்
5 hours ago