பூதப்பாண்டியில் விபத்தில் இருவர் உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

நாகர்கோவில்: பூதப்பாண்டியை அடுத்த கீழஈசாந்திமங்கலத்தைச் சேர்ந்தவர் குமரன்(47). லோடுஆட்டோ வைத்து ஓட்டி வந்தார். இவரது சுமை ஆட்டோவில் புளியங்குளத்தை சேர்ந்த சுபாஷ்(24), வடமாநிலத்தை சேர்ந்த சஞ்சய்(26) ஆகியோர், மார்பிள் கற்கள் பாரம் ஏற்றி ஈசாந்திமங்கலம் சாலையில் வந்துகொண்டிருந்தனர். அப்போது, எதிரே வந்த லாரி ஆட்டோ மீது மோதியது. இதில், ஆட்டோவில் இருந்த 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அப்பகுதியினர் அவர்களை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுபாஷ், குமரன் ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்து போயினர். சஞ்சய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பூதப்பாண்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

இந்தியா

16 mins ago

இந்தியா

26 mins ago

இந்தியா

34 mins ago

சுற்றுச்சூழல்

44 mins ago

இந்தியா

47 mins ago

இந்தியா

54 mins ago

இந்தியா

39 mins ago

விளையாட்டு

1 hour ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்