புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பெருங்காட்டில் ஒரு திருமண மண்டபத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள 1,728 கர்நாடக மதுபாட்டில்களை அறந்தாங்கி போலீஸார் நேற்று பறிமுதல் செய்தனர். மேலும், பதுக்கலில் ஈடுபட்ட பெருங்காடு கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார்(45) என்பவரை போலீஸார் கைது செய்தனர். இதேபோல, பொன்னமராவதியில் நேற்று முன்தினம் வாகன சோதனை செய்ததில் காரில் கடத்தி கொண்டு செல்லப்பட்ட ரூ.40 ஆயிரம் மதிப்பிலான கர்நாடக மதுபானங்களை ஆய்வாளர் தனபாலன் தலைமையிலான போலீஸார் பறிமுதல் செய்தனர். இவற்றை கடத்திய வலையப்பட்டி பகுதியைச் சுரேஷ் என்பவரை கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
1 hour ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
11 hours ago
சினிமா
11 hours ago
இந்தியா
12 hours ago
தமிழகம்
13 hours ago