பைக்கில் கடத்தப்பட்ட கஞ்சா பறிமுதல் :

By செய்திப்பிரிவு

திருவள்ளூர் அருகே தாமரைப்பாக்கம் கூட்டு சாலையில் நேற்று முன்தினம் மாலை வெங்கல் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே சென்ற மோட்டார் சைக்கிளை நிறுத்த முயன்றபோது, அதிலிருந்த இருவர் மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு, அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். அந்த மோட்டார்சைக்கிளில் 13 கிலோ கஞ்சாமறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, மோட்டார் சைக்கிளையும், கஞ்சாவையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

அதேபோல, திருத்தணி சரஸ்வதி நகர் அருகேயுள்ள சோதனைச்சாவடியில் நேற்று முன்தினம் சோதனையில் ஈடுபட்டிருந்த திருத்தணி போலீஸார், அவ்வழியே வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்த முயன்றனர். அப்போது, மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு, தப்பியோடிவிட்டார். மோட்டார் சைக்கிளையும், அதிலிருந்த 6 கிலோ கஞ்சாவையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், ஆந்திர மாநிலத்திலிருந்து கஞ்சாவை கடத்தி வந்து, சென்னையில் விற்க முயன்றது தெரியவந்தது. தலைமறைவான 3 பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

இந்தியா

21 mins ago

இந்தியா

52 mins ago

தமிழகம்

32 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்