உதகை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை கடும் குளிர் நிலவுவதால் மக்கள் அவதி :

By செய்திப்பிரிவு

உதகை: நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் நேற்று காலை முதல் கன மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. சாலைகளில் மழை நீர் வெள்ளம்போல ஓடியது. மழையால், பகல் நேரத்திலேயே கடும் குளிர் வாட்டி வதைத்தது. நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் சராசரியாக 7.86 மி.மீட்டர் மழை பதிவானது. நடுவட்டம் 24, அப்பர் பவானி, கூடலூர், கீழ் கோத்தகிரியில் தலா 22, தேவாலா 15, உலிக்கல் 10, கோடநாடு 10, குன்னூர் 7, பந்தலூர் 5, கேத்தி 2, குந்தா 1, உதகை 1 மி.மீட்டர் மழை பதிவானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 mins ago

க்ரைம்

25 mins ago

இந்தியா

35 mins ago

விளையாட்டு

24 mins ago

இந்தியா

40 mins ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

தொழில்நுட்பம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

சினிமா

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்