ரூ.13.88 கோடி வரி ஏய்ப்பு வழக்கில் கைதான - தொழிலதிபருக்கு ஜாமீன் : கடவுச்சீட்டை ஒப்படைக்க உத்தரவு

By செய்திப்பிரிவு

ஜிஎஸ்டி வரி ரூ.13.88 கோடி ஏய்ப்பு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி தொழிலதிபருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

துாத்துக்குடியைச் சேர்ந்த இருநிறுவனங்களில் மத்திய ஜிஎஸ்டிஅதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.13.88 கோடி வரி ஏய்ப்பு நடந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த நிறுவனங்களின் உரிமையாளரான தொழிலதிபர் கிரி ராம் கைது செய்யப்பட்டார். இவர் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல்செய்தார். இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.இளங்கோவன் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுகிறது. மனுதாரர் ஜிஎஸ்டிக்காக வழங்க வேண்டிய பணத்தில் ரூ.1.5 கோடியை உடனடியாக வழங்க வேண்டும். தனது கடவுச்சீட்டை மதுரை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்.

வழக்கின் சாட்சியங்களைக் கலைக்கவோ, ஆவணங்களை அழிக்கவோ முயற்சிக்கக் கூடாது.ஜிஎஸ்டி விசாரணை அலுவலகத்தில் 15 நாட்களுக்கு ஒருமுறை நேரில் ஆஜராக வேண்டும். இந்த நிபந்தனையை மீறினால் மனுதாரர் மீது புதிய வழக்குப் பதிவு செய்யலாம். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

10 mins ago

விளையாட்டு

52 mins ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்