காளையார்கோவிலில் காவலாளியை கட்டிப்போட்டு - டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் கொள்ளை :

By செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே டாஸ்மாக் கடையில் காவலாளியை கட்டிப்போட்டு மதுபாட்டில்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

கரோனா ஊரடங்கால் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், காளையார் கோவில் அருகே கொல்லங்குடியில் முத்தூர் சாலையில் இருந்த மதுக் கடைக்கு நேற்று முன்தினம் இரவு 5 பேர் வந்துள்ளனர். அங்கிருந்த காவலாளி கண்ணனை கத்தியைக் காட்டி மிரட்டி, அவரது கை, கால்களை கட்டிப்போட்டனர். பின்னர், இரும்புக் கம்பியால் கதவை உடைத்து உள்ளே புகுந்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்களை கொள்ளையடித்துக் கொண்டு தப்பினர். அதன் பின், காவலாளி கட்டை அவிழ்த்துவிட்டு அப்பகுதியில் உள்ளவர்களிடம் கொள்ளை குறித்து தெரிவித்தார். கூடுதல் எஸ்.பி. முரளிதரன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் தடயங்களைச் சேகரித்தனர். காளையார்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

சினிமா

12 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்