திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.150.73 கோடியில் 7,53,660 குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை துணை சபாநாயகர் பிச்சாண்டி நேற்று தொடங்கி வைத்தார்.
நியாய விலைக் கடையில் அரிசி பெறும் குடும்ப அட்டை தாரர்களுக்கு கரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டம் தி.மலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் நேற்று தொடங்கியது. ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித் தார். 7,53,660 குடும்ப அட்டைதாரர் களுக்கு ரூ.150.73 கோடியில் முதற்கட்டமாக ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசும்போது, “ரேஷன் அரிசி அட்டை பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 3-ம் தேதி தொடங்கி வைத்தார். இதையொட்டி, முதற்கட்ட நிவாரணமாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 1,627 நியாயவிலைக் கடைகள் மூலமாக 7,53,660 குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண நிதி வழங்க ரூ.150.73 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு கடைகளிலும் தினசரி 200 பேருக்கு நிவாரண நிதி வழங்கும் பணி தொடங்கியுள்ளது.
5 முத்தான திட்டங்கள்
கரோனா 3-வது அலை
இதையடுத்து அவர், கீழ்பென்னாத்தூரில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெறும் தடுப்பூசி முகாம் மற்றும் தீவிர கண்காணிப்பு பிரிவை ஆய்வு செய்தார்.
இதில், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமாரசாமி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் ராஜ்குமார், கோட்டாட்சியர் வெற்றிவேல், மாவட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ், துணை பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) ஆரோக்கிய ராஜ், உதவி ஆட்சியர் (பயிற்சி) ரவி தேஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
க்ரைம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
இந்தியா
3 hours ago
வணிகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
5 hours ago
தமிழகம்
11 hours ago
இந்தியா
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
க்ரைம்
6 hours ago