கரோனாவுக்கு ஏராளமானோர் சிகிச்சை பெறும் நிலையில் பல மருத்துவமனைகளில் தீ விபத்து ஏற்பட்டு நோயாளிகள் உயிரிழந்து வரும் சோகம் நிகழ்ந்து வருகிறது.
இதைத்தொடர்ந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தீ தடுப்பு செயல்முறை விளக்கம் மற்றும் அவசரகாலங்களில் கட்டிடத்தை விட்டுவெளியேறுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் முதல்கட்ட பயிற்சி முடிந்த நிலையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி கள் துறை சார்பில் நாகர்கோவிலில் நேற்று தீ தடுப்பு செயல்முறை விளக்கம் மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் சரவண பாபு தலைமை வகித்தார். உதவி மாவட்ட அலுவலர் இம்மானுவேல், நாகர்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் துரை மற்றும் மருத்துவர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது மருத்துவமனைகளில் உள்ள தீ தடுப்பு கருவிகளை ஆய்வு செய்து முறையாக பராமரிக்க அறிவுறுத்தப்பட்டது.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
3 mins ago
இந்தியா
32 mins ago
சினிமா
1 hour ago
தமிழகம்
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
7 hours ago
விளையாட்டு
9 hours ago
சினிமா
9 hours ago
சுற்றுச்சூழல்
9 hours ago
விளையாட்டு
11 hours ago