வீட்டில் தீ விபத்து: காவலாளி உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

கோவை ஆர்.எஸ்.புரம் அருகே, வீட்டில் மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, காவலாளி உடல் கருகி உயிரிழந்தார்.

கோவை ஆர்.எஸ்.புரம் அருகேயுள்ள, காமராஜபுரம் 5-வது வீதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் (60). இவரது மனைவி சுகந்தி (49). இவர்களது மகள் தர்ஷினி (21), மகன் தீபக். மகேந்திரன் புருக்பாண்ட் சாலையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இவர், நேற்று முன்தினம் பணியை முடித்துக் கொண்டு, வீட்டுக்கு வந்தார். வீட்டின் முதல் மாடியில் உள்ள அறையில் படுத்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்த அறையில் இருந்து கரும்புகை வெளியானது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தர்ஷினி, அந்த அறைக்குச் சென்று பார்த்தார். மகேந்திரனின் உடலில் தீப்பிடித்து எரிந்தது தெரிந்தது. அவரை காப்பாற்ற முயன்ற போது, தர்ஷினியின் உடையிலும் தீப்பிடித்தது.

இருவரது அலறல் சத்தத்தையும் கேட்ட அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து, மகேந்திரன், தர்ஷினி ஆகியோரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மகேந்திரன் உயிரிழந்தார். தர்ஷினிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஆர்.எஸ்.புரம் போலீஸார் விசாரிக்கின்றனர். போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், வீட்டில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த பொருட்களும் எரிந்து சேதமடைந்தன. இந்தச் சம்பவம் தொடர்பாக ஆர்.எஸ்.புரம் போலீஸார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

38 mins ago

தமிழகம்

7 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்