கோவூர், மேற்கு மாடவீதியைச் சேர்ந்தவர் பாஸ்கர்(37). சொந்தமாக லாரி வைத்து டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வந்தார். இவருக்கு உஷா(34) என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கரோனா ஊரடங்கு காரணமாக தொழில்நஷ்டமடைந்ததால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக பாஸ்கரைக் காணவில்லை. இதுகுறித்து அவரது தாய் மோகனாம்பாள், மாங்காடு போலிஸில் புகார் அளித்தார்.
இதற்கிடையே பாஸ்கர் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, உஷாவும் அவரது அண்ணன் பாக்கியராஜ்(38) என்பவரும் சேர்ந்து இரண்டு நாட்களுக்கு முன் இரவு, ஒரு சாக்கு மூட்டையை தூக்கிக் கொண்டு செல்வதும், பின்னர் இருவரும் வெறுங்கையுடன் திரும்பி வருவதும் தெரிந்தது.
இதுதொடர்பாக போலீஸார் உஷாவிடம் விசாரணை மேற்கொண்டதில் கணவர் பெயரில் உள்ளசொத்துகளை அபகரிப்பதற்காக தனது அண்ணனுடன் சேர்ந்து அவரை கொலை செய்து, உடலை சாக்கு மூட்டையில் கட்டி சிக்கராயபுரம் கல்குவாரி குட்டையில் வீசியதாகத் தெரிவித்தார். பின்னர் போலீஸார் பாஸ்கரின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, உஷா, பாக்கியராஜை கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
22 mins ago
இந்தியா
40 mins ago
இந்தியா
32 mins ago
கருத்துப் பேழை
1 hour ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
வாழ்வியல்
2 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
3 hours ago
உலகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago