வேலூர் வள்ளலார் பகுதியில் உள்ள பிரபல கருத்தரிப்பு மைய தனியார் மருத்துவமனை யில் பிரசவத்தின்போது தாய், சேய் உயிரிழந்தது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பாபு ராஜேந்திர பிரசாத்தெருவைச் சேர்ந்தவர் ராஜா. இவர், பேக்கரியில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி மகாலட்சுமி (32). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை கள் இல்லாததால் வேலூர் வள்ளலாரில் உள்ள பிரபல தனியார் கருத்தரிப்பு மைய மருத்துவமனையில் மகாலட்சுமி சிகிச்சை பெற்று வந்தார். இதில் கர்ப்பமடைந்த அவர் அங்கேயே மருத்துவப் பரிசோதனையை தொடர்ந்தார்.
இதற்கிடையில், பிரசவ வலி காரணமாக பிரசவத்துக்காக நேற்று முன்தினம் மகாலட்சுமி அந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
சிறிது நேரத்தில் அந்த குழந்தை உயிரிழந்துவிட்டதாக உறவினர்களிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, 2 மணி நேரம் கழித்து மகாலட்சுமியும் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் மருத்துவமனை நிர்வாகம் குறித்து புகார் அளித்தனர். அதில், தனியார் கருத்தரிப்பு மைய மருத்துவமனை மருத்துவர்களின் கவனக்குறைவால் மகாலட்சுமியும் குழந்தையும் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, விரைந்து சென்ற காவல் துறையினர் உயிரிழந்த மகாலட்சுமி மற்றும் குழந்தையின் உடல்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அடுக் கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
5 mins ago
விளையாட்டு
55 mins ago
விளையாட்டு
1 hour ago
சினிமா
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
5 hours ago