3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் :

By செய்திப்பிரிவு

நாட்றாம்பள்ளி வழியாக பெங்களூருவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசியை காவல் துறையினர் பறிமுதல் செய்து அரிசி கடத்தலில் ஈடுபட்ட நபரை கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூர் அருகே காவல் துறையினர் வாகன சோதனை யில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக கர்நாடக மாநில பதிவெண் கொண்ட சரக்கு வாகனம் ஒன்று வந்தது.

அதிகாரிகளை கண்டதும் அந்த வாகன ஓட்டுநர் சரக்கு வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக சென்றார். அவரை, விரட்டிச் சென்ற காவல் துறையினர் நாட்றாம்பள்ளி அடுத்த பச்சூர் டோல்கேட் அருகே மடக்கி பிடித்தனர்.

இதையடுத்து, அந்த வாகனத்தில் சோதனையிட்ட போது அதில் 3 டன் ரேஷன் அரிசி பெங்களூருவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, சரக்கு வாகனத்துடன் 3 டன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த காவல் துறையினர் அரிசி கடத்தலில் தொடர்புடைய திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் சுரேஷ் (35) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

23 mins ago

ஜோதிடம்

33 mins ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

9 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

க்ரைம்

9 hours ago

இந்தியா

9 hours ago

மேலும்