திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அருகே ஆட்டந்தாங்கல் பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து, கடைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருவதாக மாவட்ட காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சோழவரம் போலீஸார், நேற்று அதிகாலை ஆட்டந்தாங்கல் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அச்சோதனையில், சுமார் 380 கிலோ புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த சோழவரம் போலீஸார், பதுக்கி வைக்கப்பட்ட சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள அந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்ததோடு, இது தொடர்பாக, பாடியநல்லூர் பகுதியை சேர்ந்த சிராஜீன்(33), ஜெயமுருகன்(28) ஆகிய இருவரை கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
க்ரைம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
இந்தியா
2 hours ago
வணிகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
5 hours ago
தமிழகம்
11 hours ago
இந்தியா
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
க்ரைம்
6 hours ago