சாலையில் கிடந்த ரூ.38 ஆயிரம் பணத்தை நேர்மை தவறாமல் உரியவரிடம் ஒப்படைத்தவருக்கு போலீஸார் பாராட்டு தெரிவித்தனர்.
புதுச்சேரி மிலாது வீதியில் வசிக்கும் சையது ஹூசைன் (38), வியாபாரி. இவர் கடந்த 24-ம் தேதி நகரப் பகுதியில் உள்ள கடை வீதிக்குச் சென்று பொருட்கள் விற்ற வகையில் ரூ.38 ஆயிரம் பணத்தை மிஷன் வீதியில் உள்ள ஒரு கடையில் பெற்றுள்ளார். வீட்டுக்கு வந்து பார்த்தபோது தான்வைத்திருந்த பணத்தை வழியில் தவறவிட்டதை அறிந்து அதிர்ச் சியடைந்தார்.
இதுகுறித்து சையது ஹூசைன் பெரியகடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதனிடையே மிஷன் வீதியில் குடும்பத்துடன் ஐஸ்கிரீம் சாப்பிட வந்த சாரம் பகுதியைச் சேர்ந்த கணேஷ் (42) என்பவர் சையது ஹூசைன் தவறவிட்ட பணத்தை சாலையில் கண்டெடுத்தார்.
இருப்பினும் பணத்தை தவறவிட்டவரின் அடையாளம் தெரியாததால் அருகிலுள்ள பாண்லே விற்பனையகத்தில் தெரிவித்துவிட்டு எடுத்துச் சென் றுள்ளார்.
போலீஸார் மிஷன் வீதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது ஒருகுடும்பத்தினர் சையது ஹூசைனின் பணத்தை எடுத்துச் சென்றதும், பாண்லே விற்பனையகத்தில் பேசிக் கொண்டிருந்ததும் தெரியவந்தது. பாண்லே விற்பனையகத்தில் விசாரித்தபோது, அவர் பணத்தை பாதுகாப்பாக வைத்திருப்பதைத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று பெரியகடை காவல் நிலையம் வரவழைக் கப்பட்ட சையது ஹூசைனிடம் சாலையில் கண்டெடுத்த ரூ.38 ஆயிரம் பணத்தை ஆய்வாளர் கண்ணன் முன்னிலையில் கணேஷ்ஒப்படைத்தார். நேர்மை தவறா மல் பணத்தை ஒப்படைத்த கணே ஷூக்கு போலீஸார் சால்வை அணி வித்து கவுரவித்தனர்.
நேர்மை தவறாமல் பணத்தை ஒப்படைத்த கணேஷூக்கு போலீஸார் சால்வை அணிவித்து கவுரவித்தனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
இந்தியா
4 hours ago
விளையாட்டு
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
உலகம்
6 hours ago
ஆன்மிகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago