கிணற்றுக்குள் விழுந்த காட்டெருமை மீட்பு :

By செய்திப்பிரிவு

திருச்சி: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே அழகாஸ்திரிபட்டியில் வனப்பகுதியை ஒட்டியுள்ள சுமார் 50 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் காட்டெருமை விழுந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் அங்கு சென்று பார்வையிட்டனர். கிணற்றுக்குள் தண்ணீர் இருந்ததால் உடனடியாக மீட்க முடியவில்லை.

இதற்கிடையே, ஆனைமலையிலிருந்து மருத்துவ மீட்புக் குழுவினர் நேற்று அங்கு வந்தனர். தீயணைப்பு துறையினருடன் இணைந்து கிரேன் உதவியுடன் கிணற்றுக்குள் இறங்கி, காட்டெருமைக்கு மயக்க ஊசி செலுத்தினர்.

பின்னர் அங்கிருந்து கயிற்றைக்கட்டி காட்டெருமையை மேலே கொண்டு வந்தனர். பின்னர் வனத்துறை உதவியுடன் அருகிலுள்ள வனப்பகுதிக்குள் காட்டெருமை விடப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்