அதிமுக-பாஜக கூட்டணி படுதோல்வி அடையும் : இ.கம்யூ. பொதுச்செயலாளர் டி.ராஜா கருத்து

By செய்திப்பிரிவு

சட்டப்பேரவைத்தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி படுதோல்வி அடையும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா கேள்வி எழுப்பினார்.

திருப்பூர் வடக்குத் தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.ரவியை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா பிரச்சாரம் மேற்கொண்டார்.

முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக சட்டபேரவைத் தேர்தலில் அதிமுக,பாஜக கூட்டணி படுதோல்வியை சந்திக்கப் போகிறது. இந்த தோல்வி இந்திய அளவில் பாஜகவின் வீழ்ச்சிக்கான தொடக்கமாக இருக்கும். அதிமுக, பாஜக மீதான எதிர்ப்பு, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு மகத்தான வெற்றியைப் பெற்றுத் தரும். பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு வளர்ச்சி விகிதம் (ஜிடிபி) மிகப் பெருமளவு சரிந்துள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பால் சிறு, குறு தொழில்கள் பாழாகின. இதனால் 50 ஆண்டுகள் இல்லாதஅளவு வேலையில்லா திண்டாட்டம்அதிகரித்துள்ளது. தமிழகத்தை ஆளும் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, மாநில உரிமைகளைக் காப்பாற்றத் தவறிவிட்டது.

இவ்வாறு அவர் பேசினார். உடன் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர் சுப்பராயன் எம்பி, மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

24 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்