பெரம்பலூர் மாவட்டம் சில்லக்குடியில் கடந்த பிப்.28-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்தது. இதையடுத்து, அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்ட நிலையில் பிப்.26 அன்று தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகளைக் காரணமாகக் கூறி, ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி மறுக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.
இதையடுத்து, உரிய தேர்தல் நடைமுறைகளையும், கரோனா பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றி போட்டியை நடத்துவதற்கு அனுமதிக்கக் கோரி சில்லக்குடி கிராம மக்கள் மற்றும் ஜல்லிக்கட்டு பேரவையினர் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், அதற்கு பலன் கிடைக்கவில்லை. இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்க மறுக்கும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து, தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக நேற்று சில்லக்குடி கிராம மக்கள் வீதிகளில் கருப்புக்கொடியேற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 mins ago
வாழ்வியல்
34 mins ago
உலகம்
32 mins ago
தமிழகம்
42 mins ago
இந்தியா
45 mins ago
சினிமா
51 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
ஓடிடி களம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
தமிழகம்
1 hour ago