ஜோலார்பேட்டை/பேரணாம்பட்டு: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சோமநாயக்கன்பட்டி ரயில் நிலையத்தில் நாட்றாம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலர் நடராஜன் தலைமையிலான வருவாய்த் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, 1-வது நடைமேடை அருகே ரயிலில் கடத்துவதற்காக 45 மூட்டைகளில் சுமார் 3 டன் எடையுள்ள ரேஷன் அரிசி வைக்கப்பட்டிருந்ததை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல, பேரணாம்பட்டு வருவாய்த் துறையினர் மசிகம் கூட்டுச்சாலை யில் நேற்று அதிகாலை ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு கேட்பாரின்றி கிடந்த 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கிடங்கில் ஒப்படைத்து, அரிசி கடத்தல் கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
52 mins ago
விளையாட்டு
1 hour ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
க்ரைம்
3 hours ago
சுற்றுச்சூழல்
4 hours ago
க்ரைம்
4 hours ago
இந்தியா
4 hours ago
சினிமா
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
சுற்றுலா
5 hours ago