திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மக்கள் குறைதீர்வு கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக 2 மாவட்ட ஆட்சி யர்களும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘தேர்தல் நடத்தை விதிகளால் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்வு கூட்டம் ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல், தேர்தல் நடத்தை விதிகள் முடியும் வரை விவசாயிகள் குறைதீர்வு கூட்டமும் நடைபெறாது’’ என தெரிவித்துள்ளார்.
அதேபோல், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக திங்கள்கிழமை நடை பெறும் மக்கள் குறைதீர்வு கூட்டம் மறு உத்தரவு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது.
குறைகள் தொடர்பான மனுக்களுடன் ஆட்சியர் அலுவலகம் வருவதையும் தவிர்க்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
சினிமா
5 hours ago
விளையாட்டு
6 hours ago
வணிகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
7 hours ago
க்ரைம்
8 hours ago
சுற்றுச்சூழல்
8 hours ago
க்ரைம்
8 hours ago
இந்தியா
8 hours ago
சினிமா
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago