தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல் பணம் மாதம் இரண்டு முறை எண்ணப்படும். அதன்படி இந்த மாதம் முதலாவதாக கடந்த 4-ம் தேதி உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2-வது முறையாக நேற்று முன்தினம் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.
கோயில் செயல் அலுவலர் பா.விஷ்ணு சந்திரன் தலைமையில், கோயில் பணியாளர்கள் மற்றும் சிவகாசி பதினெண்சித்தர் மடம் குருகுலம் வேதபாடசாலை உழவாரப்பணி குழுவினர் உண்டியல் பணத்தை எண்ணினர். மொத்தம் ரூ.2 கோடியே 53 லட்சத்து 27ஆயிரத்து 423 கிடைத்துள்ளது. அதேபோல 1,524 கிராம் தங்கம், 34,005 கிராம் வெள்ளி, 51 வெளிநாட்டு கரன்சிகளையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
இந்தியா
12 mins ago
சுற்றுச்சூழல்
44 mins ago
தமிழகம்
34 mins ago
சினிமா
42 mins ago
தமிழகம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago