வழிப்பறி வழக்கில் 3 பேர் கைது

By செய்திப்பிரிவு

திருப்பூர்: திருப்பூரில் வழிப்பறி உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

திருப்பூர் வளையங்காடு பகுதியிலிருந்து அவிநாசி நோக்கி செல்லும்போது, தாறுமாறாக காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக திருப்பூர் தியாகி பழனிச்சாமி நகரைச் சேர்ந்த சூர்யா (24), கூடலூர் கொக்காடு பகுதியைச் சேர்ந்த ஃபைசல் (29), பழநியை அருகே வயலூர் பகுதியைச் சேர்ந்த சூர்யா ஜெகதீஷ் (26) ஆகியோரை பொதுமக்கள் பிடித்து தாக்கி, அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் ஒப்படைத்தனர். அவர்கள் சென்ற காரை சோதனையிட்டதில், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன. இதனால், போலீஸார் சந்தேகமடைந்து தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது, 3 பேரும் நேற்று முன்தினம் பெரியார் காலனி அருகே நடைபயிற்சி மேற்கொண்ட கண்ணன் என்பவரை கத்தியை காட்டி மிரட்டி ரூ.5 ஆயிரம் பறித்ததும், கோவை மதுக்கரையை சேர்ந்த இரண்டாம் தர கார் வாங்கி விற்பனை செய்யும் தொழிலதிபர் ஒருவரை கொலை திட்டமிட்டதும், ஏற்கெனவே அவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, வழிப்பறி வழக்கில் 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 mins ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

6 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்