உயர்கல்வி செல்வோர் எண்ணிக்கையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது உயர்கல்வி, வேளாண் துறை அமைச்சர் தகவல்

By செய்திப்பிரிவு

உயர்கல்வி செல்வோர் எண்ணிக்கையில் இந்தியாவி லேயே தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என உயர் கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சர் பேசினார்.

தருமபுரி மாவட்டம் காரிமங் கலம் அரசு மகளிர் கலைக் கல் லூரி மாணவியருக்கு 2 ஜிபி டேட்டா இணைய உபகரணம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். தமிழக உயர் கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவியருக்கு இணைய டேட்டா உபகரணங்களை வழங்கினார். பின்னர் அவர் பேசியது:

கல்லூரிகளுக்கு ஆசிரி யர்கள் நியமனம் செய்ய டிஆர்பி மூலம் 2,331 ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. கவுரவ விரிவுரையாளர்கள் 1146 பேரை நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால், நீதிமன்றம் சென்று சிலர் தடையாணை பெற்றுள்ளனர். மாணவர்கள் நலன் கருதி அரசு எந்த முடிவு எடுத்தாலும், அதில் ஏதேனும் குளறுபடிகளை செய்து ஆசிரியர் நியமனத்துக்கு தடை செய்து கொண்டே இருக்கிறார்கள். அதையும் மீறி மாணவர்கள் நலனுக்கான கவுரவ விரிவுரையாளர்களை அரசு நியமித்து மாணவர்களுக்கு பாடங்கள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவே வியந்து பார்க்கும் வகையில் தமிழ கத்தில் உயர் கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் மாணவியரின் விகிதாச்சாரம் இணையான அளவில் உள்ளது. இந்திய அளவில் உயர் கல்வி செல்வோர் 26.3 சதவீதமாக உள்ள நிலையில், தமிழகத்தில் உயர் கல்வி செல்வோர் எண்ணிக்கை 49 சதவீதமாக உள்ளது. அந்த வகை யில் இந்தி யாவுக்கே தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது.இவ்வாறு பேசினார்.

இந்நிகழ்ச்சியில், பாப்பி ரெட்டிப்பட்டி, அரூர் சட்டப் பேரவை உறுப்பினர்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார்,மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், வட்டாட்சியர் கலைச்செல்வி, அரசு மகளிர் கலைக் கல்லூரி தமிழ்த் துறை தலைவர் முனைவர் செந்தில்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 mins ago

இந்தியா

18 mins ago

இந்தியா

29 mins ago

உலகம்

29 mins ago

இந்தியா

40 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்