புதுச்சேரியில் கடும் மழையை தொடர்ந்து துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் நாராயணசாமி ஆகியோர் நேரடியாக களத்தில் இறங்கி ஆய்வு மேற்கொண்டனர்.
புதுச்சேரியில் நேற்று முன் தினம் நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை வரை பொழிந்த கன மழையினால் நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை துணைநிலை ஆளுநர் தமிழிசை பார்வையிட்டார். ஆட்சியர் பூர்வா கார்க் மற்றும் அதிகாரிகள் உடனி ருந்தனர்
ஆய்வுக்கு பிறகு அதிகாரிக ளுக்கு ஆளுநர் பிறப்பித்த உத்த ரவு தொடர்பாக ராஜ்நிவாஸ் வெளி யிட்ட தகவலில், “கனமழையில் மக்களை பாதுகாக்க உணவு, நீர், தங்குமிடங்களுக்கான சேவை செய்ய வேண்டும். தாழ்வான பகுதிகளில் தேங்கி இருக்கும் தண்ணீரை உடனடியாக அகற்ற வேண்டும். கட்டுப்பாட்டு அறை செயல்படுத்த வேண்டும். ஆம்புலன்ஸ் வசதிகளை ஏற்படுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
அதேபோல் முதல்வர் நாராய ணசாமியும் புதுச்சேரியில் பல பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு செய்தார். ரெயின்போ நகர், வெங்கட்டாநகர் உள்ளிட்ட பகுதிகளில்தண்ணீரை வெளியேற்றி மக்க ளுக்கு தேவையான வசதிகளை செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத் தியுள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
சினிமா
2 hours ago
இந்தியா
3 hours ago
வணிகம்
11 hours ago
சுற்றுச்சூழல்
4 hours ago
சுற்றுலா
4 hours ago
கல்வி
3 hours ago