தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு

By செய்திப்பிரிவு

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் பாதுகாப்புப் பணியில் முன்னாள் படைவீரர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இப்பணிக்கு நல்ல உடல்நிலையில் உள்ள திடகாத்திரமான அனைத்து முன்னாள் படைவீரர்களும் விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் முன்னாள் படைவீரர்களுக்கு மத்திய தேர்தல் ஆணையம் அனுமதிக்கும் உணவுக் கட்டணம், மதிப்பூதியம் வழங்கப்படும்.

எனவே, விண்ணப்பிக்க விருப்பமுடைய நாகை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் இளநிலை படை அலுவலர்கள், முன்னாள் படை வீரர்கள் ஆகியோர், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில், வாக்காளர் அடையாள அட்டை, அசல் படை விலகல் சான்று, அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் அணுகி, விருப்பக் கடிதத்தை அளித்து பயன்பெறலாம் என ஆட்சியர் பிரவீன் பி.நாயர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

3 mins ago

இந்தியா

5 mins ago

சினிமா

11 mins ago

ஓடிடி களம்

43 mins ago

கல்வி

57 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்