கும்பகோணம்: கும்பகோணம் அருகே பந்தநல்லூர் மேலவெளி இருமூலையைச் சேர்ந்தவர்கள் வில்லியானம் மகன் மகேந்திரன்(40), கலியமூர்த்தி மகன் மணிமாறன்(38). லாரி ஓட்டுநர்களான இருவரும் உறவினர்கள். இவர்களுக்கு இடையே ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இரு குடும்பத்தினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், மகேந்திரன், அவரது மனைவி மகாலட்சுமி, தாயார் காளியம்மாள் ஆகியோரை, மணிமாறன் மற்றும் அவரது மனைவி கவிதா(32) ஆகியோர் கட்டை மற்றும் செங்கல்லால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த மகேந்திரன், கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். படுகாயமடைந்த மகாலட்சுமி, காளியம்மாள் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வில்லியானம் கொடுத்த புகாரின்பேரில், பந்தநல்லூர் காவல் ஆய்வாளர் சார்மிளா வழக்கு பதிவு செய்து, மணிமாறன், கவிதா ஆகியோரை கைது செய்தார்.
முக்கிய செய்திகள்
உலகம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
4 hours ago
சினிமா
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
8 hours ago