ஆரணி அரசு பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு இலவச இணையதள டேட்டா கார்டு அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் 22,527 மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச இணையதள டேட்டா கார்டு வழங்கும் பணியை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்தின் தொடங்கி வைத்தார்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி என 37 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச இணையதள டேட்டா கார்டு வழங்கும் பணியின் தொடக்க விழா தி.மலை மாவட்டம் ஆரணி அரசு பொறியியல் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.

ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். செய்யாறு சட்டப்பேரவை உறுப்பினர் தூசி கே.மோகன் முன்னிலை வகித்தார். முதல்வர் அருளரசன் வரவேற்றார். 22,527 மாணவ, மாணவிகளுக்கு இலவச இணையதள டேட்டா கார்டுகளை வழங்கி திட்டத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர், “கரோனா காலத்தில் மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காக, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இலவச இணையதள டேட்டா கார்டு வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தை மாணவர்கள் நன்றாக பயன்படுத்தி படிக்க வேண்டும்” என்றார்.

இதில், கல்லூரி பேரா சிரியர்கள், விரிவுரையாளர்கள், துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

5 mins ago

இணைப்பிதழ்கள்

16 mins ago

தமிழகம்

27 mins ago

சினிமா

45 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

மேலும்