நாகை சிவசக்தி நிறுவனங்கள் சார்பில், காரைக்கால் மற்றும் திருப்பட்டினத்தில் பர்னிச்சர், கன்ஸ்ட்ரக் ஷன்ஸ் கிளைகள் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
சிவசக்தி’ஸ் மார்ட், காரைக்கால் கிளையை முகமது அலி, திருப்பட்டினம் கிளையை நாசர் ஆகியோர் திறந்து வைத்தனர். நிகழ்ச்சிக்கு, நாகை அருட்பெருஞ்ஜோதி அகல்விளக்கு மன்றத் தலைவர் சி.சௌந்தரராஜன் தலைமை வகித்தார். சிவசக்தி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநரும், நாகை இந்திய வர்த்தக தொழில் குழுமத்தின் தலைவருமான ஆர்.கே.ரவிமற்றும் இயக்குநர் கே.இளங்கோவன் ஆகியோர் வரவேற்றனர்.
சிவசக்தி இயக்குநர் ஆர்.குழந்தைவேலு, தணிக்கையாளர் குமாரவேலு, வழக்கறிஞர் வேதை ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காரைக்கால் வணிகர் சங்கத் தலைவர் முத்தையா, ராகவசாமி, சூர்யா டைல்ஸ் உரிமையாளர் ராம்குமார், நாதன் போட்டோ ஸ்டூடியோ உரிமையாளர் இளவரசன், நாகை எஸ்விஎச் அட்வர்டைசிங் சுந்தர்ராஜன் ஆகியோர் விற்பனையை தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில், நாகை இந்திய வர்த்தக தொழில் குழுமத்தின் நிர்வாகிகள், நாகை மற்றும் காரைக்கால் ரோட்டரி, லயன்ஸ் சங்க பொறுப்பாளர்கள், காரைக்கால், திருப்பட்டினம் வணிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் திரளான வாடிக்கையாளர்கள் கலந்துகொண்டனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை சிவசக்தி இயக்குநர்கள் பாலாஜி, ஜெயசீலா, செந்தில்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
42 mins ago
விளையாட்டு
1 hour ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
க்ரைம்
3 hours ago
சுற்றுச்சூழல்
3 hours ago
க்ரைம்
4 hours ago
இந்தியா
3 hours ago
சினிமா
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
சுற்றுலா
5 hours ago