காரைக்கால், திருப்பட்டினத்தில் சிவசக்தி’ஸ் மார்ட் கிளைகள் திறப்பு

By செய்திப்பிரிவு

நாகை சிவசக்தி நிறுவனங்கள் சார்பில், காரைக்கால் மற்றும் திருப்பட்டினத்தில் பர்னிச்சர், கன்ஸ்ட்ரக் ஷன்ஸ் கிளைகள் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

சிவசக்தி’ஸ் மார்ட், காரைக்கால் கிளையை முகமது அலி, திருப்பட்டினம் கிளையை நாசர் ஆகியோர் திறந்து வைத்தனர். நிகழ்ச்சிக்கு, நாகை அருட்பெருஞ்ஜோதி அகல்விளக்கு மன்றத் தலைவர் சி.சௌந்தரராஜன் தலைமை வகித்தார். சிவசக்தி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநரும், நாகை இந்திய வர்த்தக தொழில் குழுமத்தின் தலைவருமான ஆர்.கே.ரவிமற்றும் இயக்குநர் கே.இளங்கோவன் ஆகியோர் வரவேற்றனர்.

சிவசக்தி இயக்குநர் ஆர்.குழந்தைவேலு, தணிக்கையாளர் குமாரவேலு, வழக்கறிஞர் வேதை ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காரைக்கால் வணிகர் சங்கத் தலைவர் முத்தையா, ராகவசாமி, சூர்யா டைல்ஸ் உரிமையாளர் ராம்குமார், நாதன் போட்டோ ஸ்டூடியோ உரிமையாளர் இளவரசன், நாகை எஸ்விஎச் அட்வர்டைசிங் சுந்தர்ராஜன் ஆகியோர் விற்பனையை தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினர்.

விழாவில், நாகை இந்திய வர்த்தக தொழில் குழுமத்தின் நிர்வாகிகள், நாகை மற்றும் காரைக்கால் ரோட்டரி, லயன்ஸ் சங்க பொறுப்பாளர்கள், காரைக்கால், திருப்பட்டினம் வணிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் திரளான வாடிக்கையாளர்கள் கலந்துகொண்டனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை சிவசக்தி இயக்குநர்கள் பாலாஜி, ஜெயசீலா, செந்தில்குமார் ஆகியோர் செய்திருந்தனர். 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

42 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்