நாகர்கோவில்: நாகர்கோவில் வடசேரி அண்ணா விளையாட்டரங்கத்தில் நேற்று குடியரசு தினவிழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பங்கேற்பதற்காக பத்மநாபபுரம் தொகுதி திமுக எம்எல்ஏ மனோ தங்கராஜ் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவுதெரிவிக்கும் வகையிலும் தக்கலையில் இருந்து 20 கிலோ மீட்டர் சைக்கிளில் வந்தார். அவருடன் திமுக பிரமுகர்கள் 10-க்கும் மேற்பட்டோர்சைக்கிளில் வந்தனர். நிகழ்ச்சி நடைபெற்ற அண்ணா விளையாட்டரங்கம் முன்பு வந்தபோது சைக்கிள் பயணத்தில் பங்கேற்ற மணலியைச் சேர்ந்த வின்சென்ட் என்பவர் மயங்கி கீழே விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. போலீஸார் அவரை மீட்டு தண்ணீர் கொடுத்து சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சைக்கிளில் வந்ததால் சோர்வடைந்து வின்சென்ட் மயங்கி விழுந்தது தெரியவந்தது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 mins ago
வணிகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
8 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
க்ரைம்
3 hours ago
இந்தியா
2 hours ago
வாழ்வியல்
3 hours ago
தமிழகம்
3 hours ago