குறிஞ்சிப்பாடியில் திருமண மண்டபத்தில் பேனர் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொலை செய்யப்பட்டார்.
குறிஞ்சிப்பாடி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் தமிழரசன்(25). இவருக்கும், கு.நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த ரவி மகன் வெட்டு ராகுல் என்ற ராகுலுக்கும்(25) படிக்கும் காலத்தில் இருந்து முன்விரோதம் உள்ளது. குறிஞ்சிப்பாடியில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழரசன், ராகுல் மற்றும் அவரது நண்பர்கள் கலந்து கொண்டனர்.
திருமண மண்டபத்தில் பேனர் வைப்பதில் தமிழரசன் மற்றும் ராகுல் கோஷ்டியினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ராகுல் தாக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து குறிஞ்சிப்பாடி ரயில்வே கேட் அருகே நள்ளிரவு இருதரப்பினரும் மோதி கொண்டனர். இதில் தமிழரசனை கத்தியால் வெட்டினர். தமிழரசனை அவரது நண்பர்கள் மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பரிசோதனை செய்த மருத்துவர், ஏற்கெனவே தமிழரசன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக குறிஞ்சிப்பாடி போலீஸார் கு. நெல்லிக் குப்பத்தைச் சேர்ந்த மணிகண்டன்(21) என்பவரை கைது செய்தனர். ராகுலை தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
31 mins ago
விளையாட்டு
1 hour ago
சினிமா
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
5 hours ago
இந்தியா
4 hours ago